தமிழன் ஒரு பொறுக்கி, தேச துரோகி, கருப்பன் - இனி?
வீ
ஸ்ரீவத்சன், சேர்மன் மற்றும் நிர்வாக ஆசிரியர், சாணக்யன்
குரல்
சமீபத்தில் ஒரு வீடியோ பார்க்க
நேர்ந்தது! அதில் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் (தமிழ் செய்தி
தொலைக்காட்சிகள் உட்பட) மீனவர்களை இரு பிரிவாக பார்ப்பதை உணர முடிந்தது! ஒரு
பிரிவு "இந்திய மீனவர்கள்" மற்றொன்று "தமிழக மீனவர்கள்"! ஒரு மீனவன் எந்த மாநிலத்தை சேர்ந்தவன் ஆனாலும்
அவன் இந்திய மீனவன்! ஆனால் தமிழ்நாட்டை
சேர்ந்தவன் "தமிழக மீனவன்"! இதில் இருந்து இந்தியா நமக்கு என்ன
செய்தி சொல்கிறது? விரிவாக பாப்போம்!
முதல் முறையாக தருண் விஜய் என்ற நச்சு
பாம்பு திருவள்ளுவர் என்ற முகமூடியுடன் தமிழகத்தில் நுழைந்த போது, இந்த தருண் விஜயை தமிழகமே கொண்டாடியது (திமுக மற்றும் அதன் ஆதரவாளர்களான வைரமுத்து, சுப வீரபாண்டியன், நக்கீரன்) மற்றும் நடுநிலை ஊடங்களான பலவும்
(குறிப்பாக தினமலர், துக்ளக், ஜூனியர் விகடன்) வரிந்து
கட்டி ஆதரித்தன! இவர்கள் சொல்லாமல் விட்டது
ஒன்றே ஒன்றுதான் - "திருவள்ளுவரின் மறு பிறப்பு தான் தருண் விஜய்
என்று! ஆனால் அன்றே சாணக்யன் குரல் சொன்னது "தருண் விஜய் ஒரு முடிச்சி
அவுக்கி என்று! (இந்துத்துவா, தருண் விஜய், தமிழ்??!!! என்ற தலைப்பில் சாணக்யன் குரல்
பிப்ரவரி 2015 இதழ்)
தருண் விஜய் தென்னிந்தியர்கள்
கறுப்பர்கள் எனவும் கறுப்பர்கள் மட்டமானவர்கள் என்ற அர்த்தத்திலும் பேசி
இருக்கிறார். தருண் விஜய்க்கு பதில் சொன்ன திமுகவின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்
DKS இளங்கோவனும்
தனது ஒரிஜினல் நிறமான கருப்பை மட்டமாக நினக்கிறார். “தென்னிந்தியர்கள் அனைவரும் கறுப்பர்கள்
அல்ல,
கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெள்ளையானவர்களே” என்பது கருப்பை மட்டமாக, தாழ்வாக நினைக்கும் உள்மன வெளிப்பாடுதான். திமுக எப்போதும் உருப்படாது என்பதற்கு இந்த அறிக்கை ஒரு சிறந்த
அத்தாட்சி!
அப்பனை போல ஸ்டாலினும் தான் சிவப்பு -
அதனால் தான் என்னவோ இளங்கோவனை விட்டு அப்படி ஒரு கேவலமான அறிக்கையை விட வைத்து
இருக்கிறார்!
கருப்பு தமிழிசை, கருப்பு பொன்னாருக்கெல்லாம் மானம், ஈனம், சூடு, சொரணை எதுவுமே கிடையாதா? இல்லை அவர்கள் தமிழச்சிக்கு
பிறக்கவில்லையா? என்ற
கேள்வியும் உலகம் தழுவிய கருப்பு
தமிழர்களிடையே எழுகிறது!
சுப்ரமணியசாமி தொடர்ச்சியாக தமிழர்களை
பொறுக்கி என்கிறார்! இதற்கு பதில் அளிக்கிறேன் பேர்வழி என சிவப்பு தமிழன் கமலகாசன்
ஆமாம் “நாங்கள்
தமிழ் பொறுக்கி”
என்கிறார்! யார் கமலுக்கு தமிழர்களை “தமிழ் பொறுக்கி” என சொல்ல உரிமை கொடுத்தது? தமிழர்களை பொறுக்கி என்று சொன்ன
சுப்ரமணியசாமி எப்படிப்பட்ட இழிபிறப்போ அதைவிட இழிவான பிறப்பு தான் கமல் என நாம்
சொல்லலாமா? அது சரியாக இருக்குமா?
தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின்
- மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்துவிட்டு, ஆட்சி போனதும் அந்த திட்டத்தை எதிர்க்கும் அவலநிலை தமிழக்தில்
நிலவும்போது - தமிழனை எவனும் பொறுக்கி என்பான், கருப்பன்
என்பான், தேசத்துரோகி என்று தான் சொல்வான்!
பெங்களூரு சிறை சாலையில் மறைந்த
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது தினமலர் ஒரு செய்தி வெளியிட்டது! “சிறைச்சாலையில் ஜெயலலிதா ஊதுவத்தி
உருட்டுகிறார், அதற்கு அவருக்கு ஒரு நாள் கூலியாக
ருபாய் 50 வழங்கப்படுகிறது” என்று! (அடுத்த நாளே அது சிறைத்துறை
உயர் அதிகாரியால் மறுக்கப்பட்டது வேறு விஷயம்)! இது போன்ற கேடு கெட்ட பத்திரிகைகள் இருக்கும்
தமிழகத்தில் உள்ள தமிழர்களை எவனும் பொறுக்கி என்பான், கருப்பன் என்பான், தேசத்துரோகி என்று தான் சொல்வான்!
ஜெயலலிதா என்ற அந்த ஒரு ஆளுமை இருந்த
வரை அவனவன் நவ துவாரங்களையும் மூடி கொண்டு இருந்தான்! அந்த தமிழகத்தின் காவல்
தெய்வம் தன் கடைசி மூச்சை நிறுத்திய நொடியில் இருந்தே தமிழர்களை கேவலமான இழிபிறவிகள் எல்லாம்
கழுவி கழுவி ஊற்றுகின்றன!
இந்த அநியாயத்தை எல்லாம் தட்டி கேட்க
தமிழகத்தில் இன்று எந்த வலுவான தலைமையும் இல்லை என்பதே வேதனையான உண்மை!
மானங்கெட்ட கருப்பு தமிழன், பொறுக்கி தமிழன், தேச துரோகி தமிழன் கொதித்து எழுந்தால்
தான் இதற்கு விடிவு பிறக்கும்!